Search This Blog

Sunday, December 13, 2009

முத்துக்கள் மூன்று - 02

காதலைப் பாடாத கவிஞன் இல்லை என்பது போல காமத்தைத் தொட்டுக் கவிபுனையாக் கவிஞனும் இல்லையெனலாம்... காமத்தை காதலினூடு குழைத்து தருகின்ற பாடல் இது. காமத்தை பச்சையான ஆபாசங்களாக முன்வைக்காது இரட்டை அர்த்தத்துக்குள் நுழைந்து காதுக்கினிய கானம் தருகின்றான் இந்தக் கவிஞன்.

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற...

இப்பாடல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்ததாகவும் ஒரு தகவல்.

இம்மாதம் தனது அறுபதாவது அகவைக்குள் காலடி எடுத்து வைத்த நடிப்புலக மேதை ரஜனி அவர்கள் நடித்த தங்கமகன் திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றது.

இப்பாடலை எழுதியவர் கவிஞர் வாலியெனப் பலர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் இப்பாடலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் புலமைப்பித்தன். (இதனைத் தெளிவுறுத்திய கானாபிரபா அண்ணாவுக்கு நன்றிகள்)

இளையராஜா இசையமைக்க எஸ்.பி.பி.யுடன் இணைந்து எஸ்.ஜானகி இப்பாடலைப் பாடியுள்ளார்.









★ ★ ★

முண்டாசுக் கவிஞன் பாரதியார் எழுதி பின்னர் தமிழ்த் திரைப்படங்களில் ஒலி ஒளி வடிவம் அளிக்கப்பட்ட பாடல்களில் என்றைக்கும் நின்று அர்த்தம் அளிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்து போனதனால்
நானும் ஓர் கனவோ... இந்த ஞாலமும் பொய் தானோ...?

வாழ்வின் விளிம்பில் இருந்தவாறு தான் நடந்து வந்த பாதைகளையும், சுமந்து வந்த பாரங்களையும், சமூகம் தனக்குத் தந்த சன்மானங்களையும் எண்ணிப்பார்க்கின்றான் இக்கவிஞன்.

சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை, சுதந்திர தாகம், காதல், ஆன்மிகம்... என இவன் தொட்டுச் செல்லாத பக்கங்களே இல்லை எனுமாப் போல் எந்தக்காலமும் நின்று வாழும் கவிதை படைத்த எட்டயபுரத்தோன் இவன்...

கேட்டுப்பாருங்கள்... இளையராஜாவின் இன்னிசையில் ஹரிஸ் ராகவேந்திராவின் குரலசைவில் ஒலிக்கின்றது இப்பாடல்...









★ ★ ★

அண்மையில் வெளிவந்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களில் பலமுறை பலராலும் கேட்டும் பார்த்தும் முணுமுணுக்கப்பட்ட பாடல் இது.

எந்தவித பிண்ணனிக்காட்சிகளுமற்று - வெட்ட வெளி போன்ற பிரதேசத்தில் காதலனும் காதலியும் இணைந்து காதலிசைப்பது போன்ற பாடலுக்கான காட்சி பலமுறை பார்த்தும் அலுக்காத ஒன்று...

நதியே நீ எங்கே என்று கரைகள் தேடக் கூடாதா
நிலவே நீ எங்கே என்று முகில்கள் தேடக் கூடாதா

பாடலின் ஒவ்வொரு வரிகளும் காதலர்கள் பலரின் கடிதங்களில் மேற்கோளிடப்பட்டன.

சர்வம் படத்தில் யுவன் சங்கர்ராஜா இசையமைக்க ஜாவேட் அலி உடன் இணைந்து மதுஸ்ரீ பாடுகின்றார்.








1 comment:

  1. அருமையான பாடல் தெரிவுகள்......

    அதிலும் இரண்டாவது, ஹரிஸின் குரலில் கேட்கையில் உள்ளமெங்கும் உவகை பொங்கும்...

    ReplyDelete

You might also like