Search This Blog

Monday, November 9, 2009

இறப்புக்குப் பின் Facebook



எவருக்குமே தெரியாத - புரியாத புதிர் இறப்புக்குப் பின்னரான உலகம்... அது எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றி நான் அலட்டிக்கப் போறதில்லை.


ஆனால், உங்கள் இறப்புக்குப் பின்னர் உங்களுடைய Facebook கணக்கிற்கு என்ன நடக்கும்..? அது முற்றுமுழுதாக முடக்கப்படுமா...? அல்லது, Facebook இல் நீங்கள் தொடர்ந்தும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்களா? அண்மையில் Facebook நிர்வாகம் இக்கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.


Facebook கணக்கு வைத்துள்ள பயனர் ஒருத்தரின் இறப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அவர் தேடுதல் பெறுபேறுகளிலிருந்து (Search results) நீக்கப்படுகின்றார். அதாவது, இறந்தவரின் கணக்கு முற்றாக நீக்கப்படாமலிருக்க, அவர் பெயர் மற்றைய பயனர்களின் தேடலில் மறைக்கப்படுகின்றது.


அத்துடன், அந்த பயனரின் கணக்குள் எவரும் login செய்து உள்நுழைய முடியாது. ஆனால், நண்பர்கள் தங்கள் இரங்கலையும் அஞ்சலிகளையும் செலுத்துவதற்காக அவரின் சுவர் (Wall)மட்டும் திறந்து விடப்படுகின்றது.அவரின் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் அங்கே சென்று தங்கள் அஞ்சலிகளையும் நினைவுப் பகிர்தல்களையும் பதிந்து கொள்ளலாம்.


Facebook ஆனது தனது முகப்புப்பக்கத்தில் உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருக்கலாம் என சிலரை காட்சிப்படுத்தி (Friend Suggestions)அவர்களுக்கான நட்புறவினை வளர்க்க முயற்சிக்கின்றது. ஆனால், துரதிர்ஸ்டவசமாக இவ்வுலகை விட்டுச் சென்றவர்களையும் காட்சிப்படுத்தி நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுமாறு Facebbok பரிந்துரை செய்ய... வந்தது வினை. இணையத்தில் ஏகப்பட்ட விமர்சனங்கள் Facebook இனை நோக்கி வைக்கப்பட்டன. உதாரணத்துக்கு இங்கே ஒன்று.


இதற்குத் தீர்வு காணும் முகமாக, இறந்தவர்களின் கணக்குகளையும் கணக்கில் எடுக்க வேண்டிய தேவையின் நிமித்தமே "இறப்புக்குப் பின்னரான நினைவுபடுத்தல்" அறிமுகம் செய்யப்பட்டது.


உங்கள் நண்பர் ஒருத்தருக்கு மரணம் சம்பவிக்கும் பட்சத்தில்,அதனை Facebook இற்கு அறியப்படுத்த முடியும். அதற்காக இங்கே கேட்கப்படும் தகவல்களை உண்மைத்தன்மையுடன் அளிக்க வேண்டும். (http://www.facebook.com/help/contact.php?show_form=deceased)


அளிக்கப்பட்ட தகவல் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், இறந்தவரின் சுவர் (Wall) மரணத்துக்குப் பின்னரான நினைவுப் பகிர்தலுக்காக திறந்து விடப்படும்.

Sunday, November 8, 2009

வந்தியத்தேவன் - நவம்பர் 09

னக்குத் தெரிந்த இரண்டு கமல் பைத்தியங்களில் இவரும் ஒருத்தர். ஆனால், சினிமா பைத்தியக்காரன் அல்ல... உலகநாயகனுக்காக உருகி வழிகின்ற இவரைக் கமலஹாசன் அகராதி என்றால் கூட தப்பில்லை. கமலைப்பற்றி என்ன வேண்டுமோ இவர் கை நுனிவிரலில் கிடைக்கும்.

த்தனை அகவைகளைத் தாண்டிவிட்ட பின்னும் குழந்தைத்தனம் மாறாத இவரின் "கொல்" என்ற சிரிப்பு சிலவேளைகளில் எரிச்சல்களை தந்திருக்கின்றன. ஏனெனில், அதனால் தானே இன்னமும் பச்சிளம்பாலகனாக நடித்துக் கொண்டிருக்கின்றார்.

லவச ஆயிர நிமிட தொலைபேசி சேவைக்கு உரித்துடையவர். இவருக்கு அழைப்பெடுக்கும் எவருக்கும் இது தெரிந்திருக்குதோ இல்லையோ அந்த ஆயிர இலவச நிமிடங்களும் கரியாகிக் கொண்டிருக்கின்றது என்பது மட்டும் புரிந்திருக்கும். பிறகென்ன.. நான் அழைப்பெடுக்க அதை அணைத்துவிட்டு திருப்பி அழைப்பெடுக்கும் பெரும் மனசு யாரிடமிருக்கும்.

வாரத்தில் குறைந்தது ஐந்து இரவுகளிலாவது எவருக்கும் தெரியாமல் எங்கோ ஒளிந்திருந்து அந்த நான்கு பேரும் கும்மியடிப்பார்கள். சிலருக்கு மூக்குடைபடும்... சிலருக்கு டவுசர் கிழியும்... நீலம், பச்சை, வெள்ளை வண்ணங்கள் வரும்... சில வேளைகளில் முட்டி மோதி கும்மி முடியும். ஆனாலும், சொந்தச் செலவில் கருத்துக்களை உதிர்த்து சூனியம் வைப்பதில் இவருக்கு நிகர் இவரே...


ன்னைப் போல் ஒருவன்... இவருடன் இணைந்து பார்த்த முதல் படம். அதிர்ஸ்டவசமாக அது கமலின் படம். இடைவேளையில் இவரும் லோஷன் அண்ணாவும் சொன்ன "கமலிடம் எதிர்பார்த்தவைகள்" இறுதிப் பாகத்தில் பேசப்பட்டது இன்னமும் எனக்கு பிரமிப்பைத் தருகின்றது.

தோசை... முதன்முதலாய் இருவரும் சேர்ந்து உண்ட உணவு. அந்தத் தோசை உண்பதற்காய், அதிகாலை ஐந்து மணிக்கு புல்லட்டின் கதவுகள் தட்டப்பட்டது ஊரறிந்த இரகசியம். அன்று தான் தெரிந்தது இவர் ஒரு தாவர உண்ணி என... :)

ல்லோரையும் இவருக்குப் பிடிக்கும் எனப் பொய் சொல்ல மாட்டேன். ஏனெனில்,  நடிகர் விஜய் உள்ளாரே....

வர் அண்மையில் செய்த சாதனை: இருக்கிறம் சந்திப்பு முடிய சுபாங்கனின் துணையுடன் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்து, இரவு பன்னிரண்டு மணிக்கு யாரோவென எண்ணி எனக்கு அழைப்பெடுத்து கதைத்து தொலைத்தது. ஒரு பொல்லாப்பும் இல்லை.

மிக விரைவில் எங்களுக்கு கிடைக்கப் போகும் இனிய செய்தியொன்றும் உள்ளது. இந்தத் தேவனுக்கு ஒரு தேவதை... இளவரசனுக்கு ஒரு இளவரசி!!!

இத்தனையும் எதற்காக என்கிறீர்களா...?
இன்று இவருக்கு பிறந்த நாள்.

என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வந்தியரே...

You might also like