உலகின் Computer chip விற்பனையில் முண்ணனி வகித்த அமெரிக்க Intel நிறுவனத்துக்கு பெரியதொரு ஆப்பு விழுந்திருக்கின்றது. இந்நிறுவனம் வர்த்தக விதி முறைகளுக்கு விரோதமாக நடந்து கொண்டது என குற்றம் சுமத்திய ஐரோப்பிய ஒன்றியம் அதற்கான தண்டப்பணமாக 1.45 பில்லியன் அமெரிக்க டொலர்களை அறவிட்டுள்ளது.
தொழில்நுட்ப சந்தையில் மற்றைய போட்டி நிறுவனங்களை நசுக்கும் நோக்குடன் செயற்பட்டதுடன் அதிலும் உச்சக்கட்டமாக கணனிகள் தங்களுடைய தயாரிப்பு x86 chips இன்றி இயங்க மாட்டாது எனவும் Intel தெரிவித்தது பெரும் சர்ச்சையை தோற்றுவித்த நிலையில் ஐரோப்பிய யூனியனின் இந்த அறிவிப்பும் வந்துள்ளது.
இந்த காலாண்டில் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை லாபமாக ஈட்டிய Intel இற்கு இத்தொகையை செலுத்துவது பெரும் சவாலாக இருக்கப் போவதில்லை. எனினும், இதை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாக Intel தெரிவித்துள்ளது.
Search This Blog
Wednesday, May 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment