Search This Blog

Saturday, April 24, 2010

நாடு கடந்த அத்திவாரம்



எங்களிடம் அழகான வீடொன்று இருந்தது
உயிரை விலை கொடுத்து கட்டி வைத்தோம்!!!
புயல் பல தீண்டியும் புழுதி வாரி இறைத்தும்
அழகு குன்றாது அது நிமிர்ந்து நின்றது...!
ஆனால்,
நேற்று அடித்த புயல் அதைக் கொன்று போனது
அத்திவாரத்தையும் ஆட்டி வைத்தது,.
இன்று...
மீண்டும் அந்த வீட்டுக்கனவுடன்...
வட்டுக்கோட்டையில் கூரை...
நாடு கடந்து அத்திவாரம்...
தாயகத்தில் க(கூ)ட்டமைப்பு...
இவையெல்லாம்
ஒரு புள்ளியில் சந்திக்காதவரை
விழலுக்கு நீர் பாய்ச்சுகின்றோம்...!!!

4 comments:

  1. //ஒரு புள்ளியில் சந்திக்காதவரை
    விழலுக்கு நீர் பாய்ச்சுகின்றோம்...!!!//
    யதார்த்தத்தை அப்படியே சிறிய கவிதையாய்...................
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இறுதி வரி தான் உண்மை போல தெரிகிறது தல...

    ReplyDelete
  3. இதுக்கு பெயர்தான் கவிதையா, எனக்கு இதன் அர்த்தாம் புரியாவிட்டாலும் நல்லாய் இருக்கு அங்கிள். பச்சிளம் பாலகர் சங்க அகில உலக தலைவர் சதீஷ்.

    ReplyDelete
  4. //ஒரு புள்ளியில் சந்திக்காதவரை
    விழலுக்கு நீர் பாய்ச்சுகின்றோம்...!!!
    //

    உண்மை தான்! கூரையை அத்திவாரம் விமர்சிப்பதும், அத்திவாரத்தை கூரை விமர்சிப்பதும்....

    ReplyDelete

You might also like