Search This Blog

Monday, December 29, 2008

விடைபெறும் 2008

இன்னும் மூன்று நாட்களில் இன்னொரு புதிய ஆண்டு பிறக்க 2008ஆனது கைகாட்டி விடைபெற்றுச் செல்லப்போகின்றது. வழமை போன்று பழையன கழித்து புதியன புகுதலில் எல்லோரும் 2009ஐ வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த 2008 ஆனது 2009 இடம் விட்டுச் செல்லுபவை பேசும் கதைகள் கொஞ்சநஞ்சமல்ல.

மனித இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி, உலக பொருளாதாரத்தை அதல பாதாளத்துக்குள் தள்ளி, முந்தானையில் முடிந்து வைத்துள்ளதை மறந்து விட்டு பயங்கரவாதத்தை வேறெங்கிலும் தேடி... ஈற்றில் வல்லவர்களின் கரங்களில் சிக்கி வதைக்கப்பட்டாலும் ஒரு சில சாதனைகளுக்கு சொந்தக்காரனாகவும் திகழ்ந்த 2008 நீ போய் வா! மன்னிக்கவும்... வராமலே போய் விடு...! ஆனால் வருகின்ற 2009இல் ஏதாவது உருப்படியாகுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் பதிலிலேயே இருக்கின்ற சலிப்பு வெளிப்படை..!

2008இல் உலக அரங்கில் அதிகமாக கவனத்தை தன் பக்கம் திருப்பிய சம்பவங்களாக... ஈராக்கில் இன்னமும் பலியெடுக்கப்படும் அப்பாவி உயிர்கள், கொசோவாவின் உதயம், இலங்கையில் தொடரும் யுத்தமும் மீறப்படும் மனித உரிமைகளும், ஜோர்ஜியா மோதல், கறுப்பின அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வெற்றி... என ஒரு பட்டியல் நீள்கின்றது. இந்தச் சம்பவங்கள் எனக்குள்ளே பேசிய கதைகள் பல பரிமாணங்கள் உடையவை. எல்லாவற்றையும் எழுத என் பேனாவுக்கு மை போதாதென்றால் சூழ்நிலை புரிந்து கொள்ளும் வல்லவர் நீங்கள். ஆனாலும், உலக அரங்கிலே இடம்பெற்ற சில சம்பவங்களை அடுத்தடுத்த பதிவுகளில் பதிவிடுகின்றேன்.

No comments:

Post a Comment

You might also like