Tuesday, May 18, 2010
யாருக்கும் சொல்லாத கதை
நடு நிசி தாண்டிய பொழுதொன்றில்
நான் தேடும் வதனம் இதுதானென
கனவு வந்து பரிசளித்தது...!!!
கற்பனைகளும் காத்திருப்புக்களும்
களவெடுத்துக் கொண்டன என் இரவுத் தூக்கங்களை...
அல்பங்கள் புரட்டி அடையாளப்படுத்திக் கொண்டதை - ஓர் நாள்
அவசரமாய் முன்னால் நிறுத்தியது அதிர்ஸ்டம்.
அறியாது புரியாது இருந்த
அர்த்தங்களெல்லாம் அருகாமையாக்கி - இன்று
ஓடிக் கொண்டிருக்கின்றது நாழிகை...!!!
Subscribe to:
Post Comments (Atom)


அப்படியா?
ReplyDeleteசொல்லவே இல்ல...:p
ReplyDeleteநல்லாயிருக்குங்க
ReplyDeleteஎன்னமோ நடக்கிறது மர்மமாய் இருக்கிறது.
ReplyDeleteஓடட்டும் ஓடட்டும்
ReplyDelete